கொடைக்கானலில் நெரிசலுக்கு குட்-பை

X
கொடைக்கானலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, மாற்றுச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று மேற்கொண்டனர். மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில், கோடை சீசன், வார இறுதி நாட்கள், விடுமுறை காலங்களில் பயணிகள் வருகை பல மடங்கு அதிகரிக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல், தவிர்க்க முடியாததாகி வருகிறது. நெரிசலை கட்டுப்படுத்த இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளது. இருப்பினும், போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு காண தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி கொடைக்கானல், பெருமாள்மலைப் பகுதியில் இருந்து அப்சர்வேட்டரி பகுதி வரை ஏற்படும் நெரிசலை தடுக்க மாற்றுச்சாலை அமைக்க முடிவானது. அதன்படி, மாற்றுச்சாலை திட்டம் தொடர்பான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் 3 மாற்றுச் சாலைகள் திட்டங்களுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அவர்களது பரிந்துரையின் பேரில், மாற்றுச்சாலை அமைய இருக்கும் பகுலதிகளை 2 மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அமைச்கர் எ.வ.வேலு மற்றும் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
Next Story

