ஸ்ரீகருமாரியம்மன் கோயிலில் தைப்பூச விழா சிறப்பு பூஜை

X
செங்கல்பட்டு மாவட்டம், திருவடிசூலம்ஆரண்யக்ஷேத்திரம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் வளாகத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு தைப்பூச விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. மேலும், நிறுவனா் மதுரைமுத்து சுவாமிகளால் சுயம்பு அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனா். பின்னா், அன்னதானம் நடைபெற்றது.
Next Story

