இரயிலில் அடிபட்டு டெய்லர் பலி.

மாவட்டம், வாடிப்பட்டி அருகே செல்லக்குளம் பள்ளிக்கூடத்தெருவை சேர்ந்தவர் அய்யனார் மகன் கார்த்திக் செல்வம் (வயது 26). தையல் வேலை செய்து கொண்டு 10 ஆடுகள் வளர்த்து மேய்த்து வந்தார். இவருக்கு அடுத்த மாதம் 10ந் தேதி திருமணம் நடக்க உள்ளது இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தது. இவர் நேற்று முன்தினம் (பிப்.13) மதியம் 4 மணிக்கு வாடிப்பட்டி சோழவந்தான் ரயில்நிலையங்களுக்கு இடையில் கீழ் நாச்சிகுளம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தை ரயில் வருவதை கவனிக்காமல் கடக்க முயன்ற போது கூடல் நகரில் இருந்து திண்டுக்கல் சென்ற சரக்கு ரயில் வண்டி மோதி கார்த்திக் செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மதுரை ரயில்வே போலீஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

