மேலதன்னிலப்பாடி ஶ்ரீ கழனியப்ப அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

32 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று நடைபெற்றது
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த மேலதன்னிலப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ பூர்ணாம்பிகா ஸ்ரீ புஷ்கலாம்பிகா சமேத ஶ்ரீ கழனியப்ப அய்யனார் மற்றும் ஸ்ரீ பிடாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், 32 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, கடந்த 14-ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் நடைபெற்றது. 2 நாட்கள் நாள்தோறும் பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், நேற்று காலையில், 2 கால யாகசாலை பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்து கோபுர கலசத்தை அடைந்தது. பின்னர், சிவாச்சாரியார்கள் புனித நீரை கோபுர கலசங்களின் மீது ஊற்ற குடமுழுக்கு நடைபெற்றது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story