லாரி மீது இருசக்கர வாகன மோதி விபத்து ஒருவர் உயிரிழப்பு

X
அரூர் அடுத்த கீழ்மொரப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் . இவர் அரூரில் வாகன பஞ்சர் ஓட்டும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று இரவு கடையை பூட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சோரியம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது, அங்கு பழுது ஏற்பட்டு பார்க்கிங் விளக்கு போடாமல் சாலை ஓரம் நின்றிருந்த டேங்கர் லாரியின் பின்புறம் சென்று இருசக்கர வாகனம் மோதியதில் கீழே விழுந்துள்ளார்.அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே விஜயகுமார் இறந்து பரிசோதித்த டாக்டர்கள் விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து அரூர் காவலர்கள் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
Next Story

