கினார் ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு

X
கினார் ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு! செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம் கினார் ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் தேவிஅரசு தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் பொன்சிவகுமார் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து மக்களை தேடி மருத்துவம் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, ரத்தப் பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, சித்த மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

