ஆற்காடு அருகே நகை பணம் திருடியவர் கைது!

ஆற்காடு அருகே நகை பணம் திருடியவர் கைது!
X
வீட்டில் நகை பணம் கட்டியவர் கைது
ஆற்காடு பாஷா தெருவை சேர்ந்தவர் சுமதி (வயது 52). இவர் நேற்று முன்தினம் மாலை தனது 2 மகன்களுடன் ஆற்காட்டில் நடைபெற்ற மயானக்கொள்ளை திருவிழாவிற்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் இரவு வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.7% லட்சம், 3% பவுன் நகை, 300 கிராம் வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.இதுகுறித்து சுமதி ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.இந்தநிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்காடு பைபாஸ் சாலையில் தனியார் கல்லூரி அருகே ஒருவர் சந்தேகப்படும்படி தனியாக நின்று கொண்டிருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.விசாரணையில் அவர் ராணிப்பேட்டை காரைப்பகுதியைச் சேர்ந்த சாதிக் பாஷா என்கிற இமானுவேல் (55) என்பதும், சுமதி வீட்டில் நகை, பணத்தை திருடியதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பணம், நகை, வெள்ளி பொருட்களை போலீசார் மீட்டனர். பொருட்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சுமதி ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.இந்தநிலையில் நேற்று மாலை இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்காடு பைபாஸ் சாலையில் தனியார் கல்லூரி அருகே ஒருவர் சந்தேகப்படும்படி தனியாக நின்று கொண்டிருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.விசாரணையில் அவர் ராணிப்பேட்டை காரைப்பகுதியைச் சேர்ந்த சாதிக் பாஷா என்கிற இமானுவேல் (55) என்பதும், சுமதி வீட்டில் நகை, பணத்தை திருடியதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பணம், நகை, வெள்ளி பொருட்களை போலீசார் மீட்டனர்.
Next Story