கொளந்தானூர் அருகே சைக்கிளில் சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.

கொளந்தானூர் அருகே சைக்கிளில் சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
கொளந்தானூர் அருகே சைக்கிளில் சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம், பசுபதிபாளையம், ராமானுர், ராஜா நகர் 4-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி வயது 58. இவர் பிப்ரவரி 28ஆம் தேதி இரவு 7:30 மணியளவில், கரூர்- திருச்சி சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் கொளந்தானூர் எஸ் கே கிளினிக் அருகே சென்றபோது, எதிர் திசையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கரம் மோட்டார் வாகனம், ராமசாமி ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது. இந்த சம்பவத்தில் சைக்கிளுடன் கீழே விழுந்த ராமசாமிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால் உடனடியாக அவரை அருகிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக ராமசாமி அளித்த புகாரின் பேரில்,சம்பவ இடத்திற்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல்துறையினர், மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனம் எது? அதன் ஓட்டுனர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.
Next Story