கோவை: அடிப்படை வசதிகள் குறைவு-சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி !

கோவை: அடிப்படை வசதிகள் குறைவு-சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி !
X
வால்பாறை வரும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை.
கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு வசதியாக, வால்பாறையில் தனியார் தங்கும் விடுதிகளும், எஸ்டேட் பகுதியில் ரிசார்ட்டுகளும் கட்டப்பட்டுள்ளன. ஆழியாறில் இருந்து அட்டகட்டி வழியாக, வால்பாறை வரும் சுற்றுலாப் பயணிகள் கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையே வரையாடுகள், குரங்குகளைக் கண்டு ரசிக்கின்றனர். எஸ்டேட் பகுதியில் பகல் நேரத்தில் உலா வரும் யானைகள், காட்டு மாடுகளையும் கண்டு ரசித்தவாறே வால்பாறை வருகின்றனர். இதுதவிர, நீர்வீழ்ச்சிகள், நல்லமுடி காட்சி முனை, சோலையாறு அணை உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்கின்றனர். மேலும், வால்பாறை நகராட்சி பூங்காவுக்கும் செல்கின்றனர், படகு சவாரியும் செய்கின்றனர். ஆனால், சுற்றுலாப் பகுதிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாகக் குறைந்து வருகிறது. மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத் தலமாக வால்பாறை உள்ளது. இங்கு, இயற்கையை ரசிக்க ஏராளமான இடங்கள் உள்ளன. ஆனால், பூங்கா, படகு இல்லத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. நீர்வீழ்ச்சிகளுக்கு ஆர்வத்துடன் குளிக்கச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், உடை மாற்றக்கூட வசதி இல்லாததால் அவதிப்படுகின்றனர்,எனவேவால்பாறை வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story