வேலாயுதம்பாளையம் அருகே கணவன் மனைவி சென்ற டூவீலர் மீது கார் மோதி விபத்து.
வேலாயுதம்பாளையம் அருகே கணவன் மனைவி சென்ற டூவீலர் மீது கார் மோதி விபத்து. கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, வள்ளுவர் நகர் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் வயது 43. இவரது மனைவி ரம்யா வயது 35 . இவர்கள் இருவரும் மார்ச் 8ம் தேதி காலை 8:30 மணி அளவில், வேலாயுதம் பாளையத்திலிருந்து புன்னம் சத்திரம் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர். இவர்களது வாகனம் அப்பகுதியில் உள்ள வேல பழமுதிர் சோலை அருகே சென்றபோது, வேலாயுதம்பாளையம், ஆர் எஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் வயது 50 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், சசிகுமார் ஓட்டிய டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பின்னால் அமர்ந்து வந்த ரம்யாவுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக சசிகுமார் அளித்த புகாரில், காரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய சுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story




