பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி

X
ராணிப்பேட்டை மாவட்டம் ஈசலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜான் (19). இவர் நேற்று இரவு பைக்கில் எஸ்.ஆர் கண்டிகை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஜான் உயிரிழந்தார். அவரது உடலை அரக்கோணம் தாலுகா போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

