எஸ்பி தலைமையில் பொதுமக்கள் குறைத்தீர் முகாம்

காவல்துறை சார்பில் நடைபெற்ற குறைத்தீர் முகாமில் 68 மனுக்களுக்கு உடனடி தீர்வு
தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் காவல்துறை குறைத்தீர் முகாம் நடைபெறுவது வழக்கம், நேற்று மார்ச் 12, தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்ரீதரன் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலையில் குறைத்தீர் முகாம் நடைபெற்றது. இது முகாமில் மாவட்டம் முழுவதும் இருந்து 68 கோரிக்கை மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும் மனுதாரர்கள் எதிர்மனுதாரர்கள் ஆகியோரை விசாரணை செய்து 68 மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டது. மேலும் நேற்று 32 மனுக்கள் புதிதாக பெறப்பட்டது. மேலும் புதிய மனுக்கள் மீது அந்த பகுதி காவல் நிலையங்களுக்கு மேல் விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த முகாமில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சிவராமன், கரிகால் பாரிசங்கர், மனோகரன், மகாலட்சுமி மற்றும் காவல் ஆய்வாளர்கள் வேலுதேவன் பார்த்திபன், புஷ்பராணி,அன்பழகன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story