சேலம் பெரமனூரில் ராஜ அலங்காரத்தில் மாரியம்மன் வீதி உலா

X

திரளான பக்தர்கள் தரிசனம்
சேலம் பெரமனூர் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 25-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் அம்மன் ஒவ்வொரு அலங்காரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அந்த வகையில் நந்தி வாகனத்தில் நவதானியங்களால் ராஜ அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் வீதி உலா நடந்தது. கோவில் முன்பு தொடங்கிய வீதி உலா முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அப்போது மேளதாளம் முழங்க வாணவேடிக்கை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story