மதுவால் ஏற்பட்ட வயிற்று வலி- விரக்தியில் வாலிபர் அரளி விதை அரைத்துக் குடித்து தற்கொலை.

மதுவால் ஏற்பட்ட வயிற்று வலி- விரக்தியில் வாலிபர் அரளி விதை அரைத்துக் குடித்து தற்கொலை.
மதுவால் ஏற்பட்ட வயிற்று வலி- விரக்தியில் வாலிபர் அரளி விதை அரைத்துக் குடித்து தற்கொலை. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா பஞ்சப்பட்டி அரிஜன தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் வயது 44. அண்மைக்காலமாக தொடர்ந்து மது குடித்ததால் கடந்த ஒரு மாதமாக வைத்து வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை மேற்கொண்டும் அவருக்கு உரிய பலன் கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த ஆனந்தன், மார்ச் 11ஆம் தேதி காலை 7 மணி அளவில், கோவில்பாளையம் அமராவதி ஆற்றுப்படுகையில் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவமறிந்த ஆனந்தனின் மனைவி கோமதி வயது 42 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த ஆனந்தனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்
Next Story