தனியார் பேருந்து மோதி விபத்து - வாலிபர் உயிரிழப்பு!

தனியார் பேருந்து மோதி விபத்து - வாலிபர் உயிரிழப்பு!
X
சாலையை கடக்க முயன்ற வாலிபர் தனியார் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வேலூர் கருகம்பத்தூர் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் , அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (25) என்பவர் சாலையை கடக்கும்போது தனியார் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விரிஞ்சிபுரம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story