தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி பலி

X
திருத்தணி தாலுகா பெரிய கடம்பூர் பகுதியை சேர்ந்தவர் நர சிம்மன். இவரது மனைவி ராணி (வயது 70). இவர் திருத்தணி -அரக்கோணம் ரயில் மார்கத்தில் அரக் கோணம் வடக்கு கேபின் பகுதியில் ரயில் பாதை தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற ரயில் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

