சேலத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

X
சேலம் செட்டிச்சாவடி காட்டு வளவு பகுதியை சேர்ந்தவர் சூரியபிரகாஷ். சலூன் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி புஷ்பலட்சுமி (வயது 25). திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது. கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் புஷ்பலட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புஷ்பலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால், சம்பவம் குறித்து உதவி கலெக்டரும் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story

