கல்லூரி மாணவர்கள் சென்ற கார் விபத்து : மாணவி உயிரிழப்பு

ஆந்திர எல்லையில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் நாய் குறுக்கே வந்ததா நிலை தடுமாறி மரத்தின் மீது மோதி விபத்து மாணவி பலியானார் 7 பேர் படுகாயம் விபத்து குறித்து தடா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் ஆரம்பாக்கம் அருகே ஆந்திர எல்லையில் சென்னை கொல்கத்தா தேசிய இளைஞர் அணி சென்ற கார் நாய் குறுக்கே வந்ததா நிலை தடுமாறி மரத்தின் மீது மோதி விபத்து மாணவி பலியானார் 7 பேர் படுகாயம் விபத்து குறித்து தடா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை சென்னையிலிருந்து கல்லூரி மாணவர்கள் எட்டு பேர் சொகுசு கார் மூலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள வரதய்யா பாளையம் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்றபோது முன்னாள் சென்ற லாரியை முந்த முற்பட்டபோது நாய் குறுக்கே வந்ததில் கார் நிலை தடுமாறி தமிழக ஆந்திர எல்லையோர பகுதியான பெரியவெட்டு குப்பம் பகுதியில் உள்ள மரத்தில் மோதி தலை குப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. மரத்தின் மீது மோதியது இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த சம்ரீன் என்ற கல்லூரி மாணவி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சொகுசு காரில் சென்ற ஒரு மாணவி 6 மாணவர்கள் படுகாயங்களுடன் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர் விபத்துக்குள்ளானவர்கள் எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது குறித்து ஆந்திர மாநிலம் தடா போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில, உயிரிழந்த பெண்ணின் உடல் மட்டும் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்த கல்லூரி மாணவி மற்றும் படுகாயங்களுடன் சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவ மாணவியர் 7பேர் விவரங்கள் குறித்து ஆந்திர மாநில போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story