சேலத்தில் மேம்பால இரும்பு கம்பியில் தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை

சேலத்தில் மேம்பால இரும்பு கம்பியில் தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
X
போலீசார் விசாரணை
சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 72). இவர் நேற்று காலை சேலம் பெரியார் மேம்பால படிக்கட்டில் உள்ள இரும்பு கம்பியில் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவருடைய உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து முதியவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story