மின்சாரம் தாக்கி டீக்கடைக்காரர் பலி

X
அருமனை அருகே காரோடு பகுதியை சேர்ந்தவர் டைட்டஸ் (58). அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி அல்போன்ஸ். இந்த தம்பதிக்கு ஆல்வின் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் நேற்று டைட்டஸ் டீக்கடையில் இருந்து வீட்டிற்கு சென்றார். இதனால் மனைவி அல்போன்ஸ் டீக்கடைக்கு சென்றார். அந்த சமயத்தில் அந்த பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது வீட்டின் பின்பக்க மின்கம்பத்தில் இருந்து வீட்டுக்கு வரும் மின் கம்பியின் கீழ் சென்ற ஒயரில் டைட்டஸ் இன் கைபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மின்சாரம் தாக்கி, நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். சிறகு நேரத்தில் பின்னர் அல்போன்ஸ் வீட்டிற்கு வந்து கணவர் மின்சாரம் தாக்கிய சம்பவம் குறித்து அருமனை போலீஸ்சில் புகார் செய்தார். போலீசார் டைட்டஸ் உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

