டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை

X
தேவகோட்டை ராம்நகர் பகுதியில் வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ள நிலையில் அதிக மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மதுபான கடை ஒன்று செயல்பட்டுவரும் நிலையில் மக்களின் எதிர்ப்பை மீறி மாவட்ட நிர்வாகம் மேலும் ஒரு கடையை திறந்துள்ளது. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும், நீதிமன்றமும் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் மதுபான கடையை திறக்க கூடாது என்று உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ராம் நகர் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்
Next Story

