கோவை: சூறாவளி காற்றுடன் மழை -வாழை மரங்கள் சேதம் !

கோவை: சூறாவளி காற்றுடன் மழை -வாழை மரங்கள் சேதம் !
X
காரமடை அருகே உள்ள கண்டியூர் மற்றும் பனப்பாளையம் கிராமங்களில் வீசிய கடும் காற்றால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.
மேட்டுப்பாளையம், சிறுமுகை மற்றும் காரமடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை காரமடை அருகே உள்ள கண்டியூர் மற்றும் பனப்பாளையம் கிராமங்களில் வீசிய கடும் காற்றால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. அறுவடைக்கு இன்னும் சில வாரங்களே இருந்த நிலையில், வாழை மரங்கள் அடியோடு சாய்ந்ததால் இப்பகுதி விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதனால் அவர்களுக்கு கணிசமான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், நாங்கள் மிகுந்த சிரமப்பட்டு வாழை மரங்களை வளர்த்தோம். இன்னும் கொஞ்ச நாட்களில் அறுவடை செய்து லாபம் பார்க்க இருந்தோம். ஆனால், இந்த சூறாவளி காற்று எல்லாவற்றையும் நாசமாக்கிவிட்டது. அரசு அதிகாரிகள் உடனடியாக எங்கள் தோட்டங்களை ஆய்வு செய்து, சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு, சேதமடைந்த வாழைத் தோட்டங்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Next Story