திருச்சி கோளரங்கத்தில் நாளை வான்நோக்குதல் நிகழ்வு

திருச்சி கோளரங்கத்தில் நாளை வான்நோக்குதல் நிகழ்வு
X
திருச்சி அண்ணா அறிவியல் மைய கோளரங்கத்தில் சனிக்கிழமை (ஏப்.12) வான்நோக்குதல் நிகழ்வு நடைபெறுகிறது
பள்ளி மாணவா்கள், குழந்தைகளிடையே வான் அறிவியல் ஆா்வத்தை அதிகப்படுத்தும் வகையில் மாதந்தோறும் 2-ஆவது சனிக்கிழமைகளில் வான்நோக்குதல் நிகழ்வு, திருச்சி அண்ணா கோளரங்கத்தில் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதத்துக்கான வான்நோக்குதல் நிகழ்வு சனிக்கிழமை (ஏப்.12) நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்கும் மாணவா்களுக்கு வானில் தோன்றுவதை தொலைநோக்கிமூலம் பாா்க்கச் செய்து அறிவியல் மைய அலுவலா்கள் மூலம், கோள்கள் குறித்த விவரங்களும் விளக்கிக் கூறப்படும். மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை இந்த நிகழ்வு நடைபெறும் என அறிவியல் மைய திட்ட இயக்குநா் ரா. அகிலன் தெரிவித்துள்ளாா்
Next Story