நின்றிருந்த வேன் மீது ஆட்டோ மோதியதில் ஒருவர் பலி

நின்றிருந்த வேன் மீது ஆட்டோ மோதியதில் ஒருவர் பலி
X
மதுரை பேரையூர் அருகே நின்றிருந்த வேன் மீது ஆட்டோ மோதியதில் ஒருவர் பலியானார்.
மதுரை மாவட்டம் சாப்டூரைச் சேர்ந்த தமிழரசன் (59). இவரது மனைவி வளர்மதி (42). மகள் சுபஸ்ரீ (26). பேத்தி இலன்இன்பா (3) ஆகியோர் டி.கல்லுப்பட்டியிலுள்ள உறவினரின் திருமணத்திற்கு நேற்று (ஏப்.14) காலை புறப்பட்டு சென்றனர். பிறகு மதியம் சாப்டூர் செல்ல ஆட்டோவில் டி.கல்லுப்பட்டி -- பேரையூர் ரோட்டில் தம்பிபட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது ரோடு ஓரத்தில் நின்ற வேன் மீது ஆட்டோ மோதியதில் தமிழரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வளர்மதி, சுபஸ்ரீ, இலன்இன்பா ஆகியோர் காயமடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். டி. கல்லுப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அய்யனார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story