கட்டிட மேஸ்திரி கிணற்றில் சடலமாக மீட்பு

X

தர்மபுரி அருகே கட்டிட மேஸ்திரி விவசாய கிணற்றில் சடலமாக மீட்பு
தர்மபுரி வெண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் கட்டிட மேஸ்திரி. இவருடைய மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. கடந்த 9-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். பின்னர் ஜெகநாதன் மாயமானது குறித்து அவருடைய குடும்பத்தினர் தர்மபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் நகர காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வெண்ணாம்பட்டி பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் நேற்று மாலை ஜெகநாதனின் உடல் மிதந்தது. இது குறித்து தர்மபுரி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஜெகநாதன் உடலை மீட்டனர். பின்னர் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா..? அல்லது வேறு ஏதேனும் காரணமா..? என்பது குறித்து தர்மபுரி நகர காவலர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story