சேலத்தில் மூதாட்டியின் நகையை திருடிய மருமகள் கைது

சேலத்தில் மூதாட்டியின் நகையை திருடிய மருமகள் கைது
X
போலீசார் நடவடிக்கை
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி யுவராணி (வயது 30). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. இதனிடையே வீட்டில் இருந்த மணிகண்டனின் தாயார் பாக்கியத்தின் (60) நகைகள் கொஞ்சம், கொஞ்சமாக திருட்டு போனது. மொத்தம் 8 பவுன் நகை திருட்டு போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி பாக்கியம் நகைகள் திருட்டு குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதற்கிடையே இந்த நகை திருட்டு தொடர்பாக போலீசாருக்கு யுவராணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அதன்பேரில் அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் நகையை திருடி விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 8 பவுன் நகை மீட்கப்பட்டது.
Next Story