கள ஆய்வுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.

கள ஆய்வுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.
X
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தலைமையில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பரமத்தி வேலூர் வட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொண்ட கள ஆய்வுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், புன்செய் இடையார் மேல்முகம் கிராமம், கவுண்டம்பாளையம், தாட்கோ புதிய சமுதாயக் கூடத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் பரமத்தி வேலூர் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொண்ட கள ஆய்வு தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் அரசின் சேவைகள், நலத்திட்டங்கள், தங்குதடையின்றி பொதுமக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையிலும், நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை ஏற்படுத்திடும் வகையிலும் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு தற்பொது நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ், பரமத்தி வேலூர் வட்டத்தில் இன்று காலை 9.00 மணி முதல் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பள்ளிக்கல்வித்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மின்சாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சமூகநலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த கள ஆய்வின் மூலம் மேம்படுத்தப்பட்ட சேவையை வழங்குதல், திட்டங்களை விரைவுப்படுத்துதல் குறித்து தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து விரைந்து தீர்வு காண வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தொடர்ந்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். முன்னதாக, திடுமல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு, இதுவரை வழங்கப்பட்ட நகைக்கடன், பயிர் கடன், திரும்ப செலுத்தப்பட்ட விவரங்கள், நிலுவையில் உள்ள கடன், இந்நிதியாண்டில் வழங்கப்பெற வேண்டிய தவணை விவரங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு வருகைபுரிந்திருந்த விவசாயிடம் கலந்துரையாடினார். மேலும், பல்நோக்கு சேவை மையத்தில் எண்ணெய் பிழியும் அலகில் ஆய்வு மேற்கொண்டார். வடகரையாத்தூர் ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீட்டை பார்வையிட்டு பயனாளி உடன் கலந்துரையாடினார். ,பிலிக்காபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினசரி புறநோயாளிகள் எண்ணிக்கை, மகப்பேறு சிகிச்சை விபரம், மருந்துகளின் இருப்பு, வருகை பதிவேடு, ஆய்வக பதிவேடு ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, குன்னத்தூர் ஊராட்சி, அய்யம்பாளையத்தில் நாற்றங்கால் உற்பத்தி செய்யப்படுவதை பார்வையிட்டு உற்பத்தி செய்யப்படும் நாற்றுகள் விபரம், உற்பத்தி கால அளவு, நாற்றுகள் விநியோகிக்கப்படும் விபரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பொன்மலர்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதியதாக வகுப்பறைகள் கட்டப்பட்டு வருவதையும், பயிலும் மொத்த மாணவ, மாணவியர்களின் விபரம், பணிபுரியும் ஆசிரியர்கள், தேர்வு நடைபெறும் நாட்கள், பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்தும், பாண்டமங்கலம் பேரூராட்சியில் புதியதாக மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு தொட்டியின் கொள்ளளவு, பயன்பெறும் மொத்த குடும்பங்கள், குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள விபரம், பணி ஒப்பந்த காலம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, பாண்டமங்கலம் பேரூராட்சியில் புதியதாக கட்டப்பட்டுள்ள கிளை நூலகத்தில் தினசரி வருகைபுரியும் வாசகர்கள் விபரம், பராமரிக்கப்படும் புத்தகங்கள், அரசு போட்டித்தேர்விற்கான புத்தகங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, நூலகத்தில் சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும் என பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் கால்நடை மருந்தகத்தில் தினசரி சிகிச்சை அளிக்கப்படும் கால்நடைகளின் எண்ணிக்கை, கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரம், மருந்துகளின் இருப்பு உள்ளிட்டவை குறித்தும், பரமத்தி தேர்வு நிலை பேரூராட்சியில் தலைமை நீரேற்று நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், பரமத்தி வேலூர் வட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு துறைகள் சார்ந்த உயர் அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சு.வடிவேல், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, இணைபதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் க.பா.அருளரசு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சே.சுகந்தி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story