பனப்பாக்கத்தில் மயங்கி விழுந்து முதியவர் பலி!

X
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த முருகூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 54). நூல் வியாபாரம் செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று பனப்பாக்கம் பகுதியில் நூல் வியாபாரம் செய்வதற்காக வந்துள்ளார். அப்போது பஜார் பகுதியில் வரும்போது திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். இதை கண்ட அங்கிருந்தவர்கள் நெமிலி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

