விழுப்புரம் திரு.வி.க., வீதியில் உள்ள ஆஞ்சநேய சுவாமி கோவிலில் தெப்பல் உற்சவம் நடந்தது.

விழுப்புரம் திரு.வி.க., வீதியில் உள்ள ஆஞ்சநேய சுவாமி கோவிலில் தெப்பல் உற்சவம் நடந்தது.
X
லட்ச தீப விழாவை ஒட்டி தெப்ப உற்சவம் நடைபெற்றது
கோவிலில் கடந்த 10ம் தேதி லட்சதீப விழா சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனத்தோடு துவங்கியது.தொடர்ந்து தினமும் சுவாமி ஸ்ரீ ராமர், சீதா, லட்சுமணரோடு ஆஞ்சநேய சுவாமி வீதியுலா, சந்திரபிரபை வாகன வீதியுலா, நாகவாகனம், கருடசேவை, இந்திர விமானம், குதிரை வாகனம், புஷ்ப பல்லக்குகளில் வீதியுலா நடந்தது.தொடர்ந்து நேற்று இரவு 11:00 மணிக்கு ஸ்ரீ ராமர், சீதாதேவி, லட்சுமணன் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி பட்டாபிஷேக அலங்காரத்தில் ஆஞ்சநேய புஷ்கரணி குளத்தில் தெப்பல் ஓடத்தில் தெப்போற்சவம் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story