ஓசூர் அருகே சாலையோரம் மயங்கி கிடந்த முதியவர் உயிரிழப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள கலுகொண்டப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே சாலை ஓரத்தில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி கிடந் தார். இது குறித்து தகவல் அறிந்த மத்திகிரி போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் அந்த முதியவர் பரிதாபமாக இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என மத்திகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story

