அரக்கோணதில் ஆன்லைனில் சூதாட்டம் நடத்திய முதியவர் கைது!

X
அரக்கோணம் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாரிமங்கலம் பகுதியில் சிலர் ஆன்லைனில் சூதாட்டம் நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாரிமங்கலம் பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு விசாரனை மேற்கொண்டு வந்தனர். அப்போது அதேப்பகுதியை சேர்ந்த முத்து (வயது 66) என்பவர் ஆன்லைனில் காட்டன் சூதாட்டம் நடத்தியது தெரிய வந்ததையடுத்து முத்து மீது போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story

