ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான ஒகேனக்கல் காவிரி ஆறு காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி பிலிகுண்டலு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக பொழியும் கனமழையின் காரணமாகவும் பெண்ணாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரம் வனப்பகுதிகளில் பொழியும் மழையின் காரணமாகவும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவுதமாக காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் வினாடிக்கு 5000 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து மே 17 இன்று காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 7000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது இதன் காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. தொடர்ந்து தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டளவில் மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் நீரின் அளவை கணக்கீடு செய்து வருகின்றனர்.
Next Story




