அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு

அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு
X
மதுரை அருகே உசிலம்பட்டியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட வாலாந்தூர், பசுக்காரன்பட்டி, அய்யனார்குளம், விக்கிரமங்கலம் பகுதியில் உள்ள அதிமுக வாக்குச்சாவடி பாக முகவர்கள் அமைப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நேற்று (ஜூன் 1)நடைபெற்றது. பின்னர் விக்கிரமங்கலத்தில் செய்தியாளர்களிடம் உதயகுமார் கூறியதாவது. முதல்வர் மதுரையை சுற்றி பார்த்தவர் மதுரையின் வளர்ச்சியை சுற்றி பார்க்கவில்லை, அவ்வாறு சுற்றி பார்த்திருந்தால் மெட்ரோ கிடைத்திருக்கும் விமான நிலையத்தின் சுரங்கபாதை கிடைத்திருக்கும். மேம்பாலங்கள் விரைவாக நடந்திருக்கும். கூட்டு குடிநீர் திட்டங்கள் கிடைத்திருக்கும். எல்லாம் எடப்பாடி பழனிச்சாமி, அம்மா அறிவித்த திட்டங்கள் அவையெல்லாம் இன்று ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன, சில திட்டங்கள் கிடப்பில் கிடக்கிறது என்றார். இந்நிகழ்வில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story