உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தூய்மை பணி நடைபெற்றது

X
தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சி தூய்மை இந்தியா இயக்கம் சார்பாக வரும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நகராட்சி அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், பேப்பர் டயர், உலோகப் பொருட்கள், ஆகிய பொருள்களை கண்டறிந்து சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் நகராட்சி ஆணையாளர், சுகாதார அலுவலர் சுகாதார ஆய்வாளர், சுகாதார மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் தூய்மை பணியாளர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

