வேலகவுண்டம்பட்டி அருகே மயானத்தின் முன்பு அடையாளம் தெரியாத ஆண் பிணம்.

X
Paramathi Velur King 24x7 |11 Jun 2025 8:00 PM ISTவேலகவுண்டம்பட்டி அருகே மயானத்தின் முன்பு அடையாளம் தெரியாத ஆண் பிணம் போலீசார் விசாரணை.
பரமத்தி வேலூர், ஜூன்.11: நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே எர்ணாபுரம் கால்நடை மருத்துவமனை அருகில் மயானம் உள்ளது. இந்த மயானத்தின் முன்பு சாலையோரத்தில் சுமார் 50 வயது மதிக்கதக்க ஆண் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேலகவுண்டம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் இறந்த ஆணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊர்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
