கோவை: ரயில்வே மேம்பாலத்தில் ஆண் தூக்கிட்டு தற்கொலை !

கோவை: ரயில்வே மேம்பாலத்தில் ஆண் தூக்கிட்டு தற்கொலை !
X
கோவை மாவட்டம் உக்கடம் சுங்கம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தில், ஒருவர் தொலைபேசி வயர் மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை மாவட்டம் உக்கடம் சுங்கம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தில், ஒருவர் தொலைபேசி வயர் மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று மாலை ரயில்வே பாலத்தில் ஆண் ஒருவர் தூக்கிட்டு தொங்குவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக தகவலறிந்த ராமநாதபுரம் மற்றும் உக்கடம் காவல் நிலையங்களில் இருந்து போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை சோதனை செய்தனர். பின்னர், சம்பவ இடத்தில் இருந்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தற்கொலை, பைபாஸ் சாலையின் முக்கிய இடத்தில் நிகழ்ந்ததால், ஒரு மணி நேரத்திற்கு மேலாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் நிலைமையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு, போக்குவரத்தை மீண்டும் இயல்பிற்கு கொண்டு வந்தனர். சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story