நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்

X
செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் உள்ள நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர திமுக சார்பில் நடந்த 3, 4, 13, 18, 21 ஆகிய வார்டுகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். இதில் நகர மன்ற தலைவரும், திமுக நகர செயலாளருமான எம்.கே.டி.கார்த்திக்தண்டபாணி தலைமை தாங்கினார். வார்டு செயலாளர்கள் ஹரி, தினேஷ்குமார், ஏழுமலை, ஜி.எம்.கார்த்திக், ஜெமினிஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர மன்ற துணை தலைவர் ஜி.கே.லோகநாதன் அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக செங்கல்பட்டு தொகுதி தேர்தல் பார்வையாளர் பிரபுகஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு ஒவ்வொரு நிர்வாகிகளிடமும் ஆலோசனை வழங்கினார். இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கமலக்கண்ணன், மணிகண்டன், வார்டு கவுன்சிலர்கள் ஸ்ரீமதிராஜி, ரவி, சதீஷ்குமார், ஜெயந்திஜெகன், சசிகலாசெந்தில் உட்பட வார்டு செயலாளர்கள், இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மகளிர் அணியை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னதாக அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திப்பட்டது.
Next Story

