பவித்ரம் அருகே டூவீலர் மீது டெம்போ ட்ராவலர் மோதி முதியவர் உயிரிழப்பு.
பவித்ரம் அருகே டூவீலர் மீது டெம்போ ட்ராவலர் மோதி முதியவர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் , புகலூர் தாலுக்கா , பெரிய தாதம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி வயது 68. இவர் ஜூன் 15ஆம் தேதி காலை 6:30 மணி அளவில் , கோவை -கரூர் சாலையில் அவரது டூவீலரில் சென்றார். பவித்திரம் அருகே சென்றபோது , அதே சாலையில் பின்னால் வந்த திருப்பூர் மாவட்டம், பூலுவாபட்டி , நெருப்பெருஞ்சல் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் வயது 25 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டெம்போ ட்ராவலர் பழனிச்சாமி டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் துடி துடித்து உயிரிழந்தார் பழனிச்சாமி. இந்த சம்பவம் அறிந்த பழனிச்சாமியின் மகள் கோகிலா வயது 36 என்பவர் அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் , உயிரிழந்த பழனிச்சாமியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து , விபத்து ஏற்படுத்திய அருண்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் க.பரமத்தி காவல்துறையினர்.
Next Story




