மணிமுத்தாறு அருவியில் நான்காவது நாளாக தடை நீடிப்பு

X
திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் தென்மேற்கு பருவ மழை காரணமாக மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு நலன் கருதியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் வனத்துறை சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதித்தது. வனத்துறையின் தடையானது இன்று நான்காவது நாளாக நீடிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Next Story

