ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேத்திகளை கொன்றுவிட்டு தாய், மகள் இருவர் தற்கொலை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேத்திகளை கொன்றுவிட்டு தாய், மகள் இருவர் தற்கொலை
X
ஒட்டன்சத்திரம் அருகே சின்ன குழிப்பட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேத்திகளை கொன்றுவிட்டு தாய், மகள் இருவர் தற்கொலை.நான்கு நபர்கள் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இடையகோட்டை போலீசார் விசாரணை
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள் பவித்ரா (28 ) என்பவருக்கும் கரூர் மாவட்டம் பள்ளபட்டி அருகே உள்ள செளந்தபுரம் பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு மாதமாக சின்ன குழிப்பட்டி தாயார் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் பள்ளபட்டியைச் சேர்ந்த ஒருவருடன் பவித்ராக்கு தொடர்பு ஏற்பட்டதால் அந்த நபருடன் 17. 6.2025 அன்று மாலை 6 மணி அளவில் பவித்ரா வீட்டை விட்டு சென்று விட்டார். இதனால் அவமானம் அடைந்த பாட்டி செல்லம்மாள், மகள் காளீஸ்வரி ஆகியோர் இரண்டு பேரும் பேத்திகளான லித்திக்ஸா (7),தீப்தி (5) குழந்தைகளை கொன்று வீட்டில் இருந்த பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து இடையகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்டவர்களின் உடல்களை உடல் கூராய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Next Story