பாதாள சாக்கடை பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்.

மதுரை அருகே நாராயணபுரம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகளை இன்று அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பாலை பகுதியில் மாநகராட்சி வார்டு எண் 5, 13 நாராயணபுரம் மற்றும் ஆத்திக்குளம் ஐலேண்ட் நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை பணிகள் குறித்து இன்று (ஜூன்.21) வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் . உடன் மாவட்ட ஆட்சியர் சங்கீதா மாநகர மேயர் இந்திராணி மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் மற்றும் மாநகராட்சி செயற்பொறியாளர்கள் அதிகாரிகள் பலர் இருந்தனர்.
Next Story