சங்கரன்கோவில் அருகே டிராக்டர் கவிழ்ந்து இன்று விவசாயி பலி

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பருவக்குடி கிராமத்தைச் சேர்ந்த பாண்டிராஜ் (45) என்பவர் விவசாயத்திற்காக டிராக்டர் எடுத்து சென்று கொண்டிருந்தபோது சாலையில் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்தானது. இதில் விவசாயி பாண்டியராஜ் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

