தளபதி விஜய் பிறந்த நாள் - நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

X
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி விஜய் அவர்களின் 51-வது பிறந்த நாளை முன்னிட்டு, கோவை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் பல்வேறு சமூக நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. கழக பொதுச் செயலாளர் N. ஆனந்த் அவர்களின் ஆலோசனையிலும், மாவட்டச் செயலாளர் S. பாபு அவர்களின் வழிகாட்டுதலிலும், சுல்தான்பேட்டை ஒன்றியச் செயலாளர் அக்ஷயா பிரகாஷ் தலைமையிலான குழுவினரால் இந்நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இதன் கீழ், 10ம் மற்றும் 12ம் வகுப்புகளில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களில் 25 பேருக்கு கல்வி ஊக்குவிப்பு விருதுகள் வழங்கப்பட்டன. பாப்பம்பட்டி ஊராட்சியில் 300 பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இடையார்பாளையத்தில் கண் குறைபாடுடைய மாணவிக்குத் தேவையான மருத்துவ நிதி உதவியும், புதிய கண் கண்ணாடியும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கழகக் கொடியேற்ற நிகழ்வும், இனிப்புகள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. வாரப்பட்டி ஊராட்சியில் மாற்றுத் திறனாளி சிறுமி குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கான அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. வதம்பச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்ற நலத்திட்ட நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. தளபதி விஜய் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற இந்நிகழ்வுகள், சமூக நலன் மற்றும் மனித நேயத்தின் வெளிப்பாடாகக் காணப்பட்டது.
Next Story

