ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட ஒகேனக்கல் காவிரியாற்றில் கர்நாடக மாநில அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து, நேற்று 22,000 கன அடியாக இருந்த நீர்வரத்து ஜூன் 23 இன்று காலை 9 மணி நிலவரப்படி, 14,000 கனஅடியாக நீர்வரத்து சரிந்துள்ளது. தொடர்ந்து தமிழக கர்நாடக எல்லை பகுதியான பீலிகுண்டலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீரின் அளவை கணக்கீடு செய்து வருகின்றனர். தொடர்ந்து நான்காவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் விதித்த தடை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story



