உச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட மாற்றுத்திறனாளி

உச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட மாற்றுத்திறனாளி
X
மதுரை உசிலம்பட்டியில் மாற்றுத்திறனாளி பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே கே. மீனாட்சி பட்டி தெற்கு தெருவை சேர்ந்த நாராயணனின் மகன் சத்தியமூர்த்தி ( 30 ) என்பவர் காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் மனவிரக்தியில் பூச்சி மருந்து சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார். இவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று( ஜூன் .23) இரவு உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story