காவல்துறை விசாரணை மரணங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

காவல்துறை விசாரணை மரணங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X
நாம் தமிழர் கட்சி
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில், கோவில் காவலாளியான அஜித் குமார் போலீசாரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு போலீசாரின் கொடூர தாக்குதல்களால் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை 24 லாக்கப் மரணங்கள் அரங்கேரி உள்ளதால் காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும் . ரத்தம் குடிக்கும் காவல்துறை, கொலைக்கூடங்களாக மாறும் காவல் நிலையங்கள் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழும்பியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் தீபக் சாலமன், மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரன், நாகர்கோவில் தொகுதி பொறுப்பாளர் முத்து குமார் ,மாநில மீனவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஜெயன்றீன், குமரி மண்டல செயலாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
Next Story