ஆற்காடு:கார் மோதி முதியவர் பலி

X
வாலாஜா தாலுகா புளியங்கண்ணு நவ்லாக் பகுதியை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (வயது 60). இவர், இரவு பூட்டுத்தாக்கை அடுத்த அரப்பாக்கம் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றார். பின்னர் அவர் வீடு திரும்புவதற்காக தேசிய நெடுஞ்சாலையை கடந்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற கார் திடீரென சாமிக்கண்ணு மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரத்தினகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

