கூடுதல் பஸ்கள் இயக்க பொதுமக்கள் வேண்டுகோள்

X
பொன்னமராவதி அருகே உள்ள எம்.உசிலம்பட்டி ஊராட்சி சூரப்பட்டி, வடக் கிபட்டி வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சூரப்பட்டி மற்றும் வடக்கிபட்டி பொதுமக்கள் பொன்னமராவதி அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளருக்கு அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: எம்.உசிலம்பட்டி ஊராட்சி சூரப்பட்டி, வடக்கிபட்டி மற்றும் சுற்றியுள்ள கீழக்குறிச்சிபட்டி, ஊனையூர் உள்ளிட்ட கிராமங்களில் 5 ஆயிரம் பேர் வசிக்கின் றனர். ஆனால் இப்பகுதியில் போதிய பஸ் வசதி யின்றி அவதிக்குள்ளாகி வருகிறோம். தினமும் 3 முறை மட்டுமே பஸ் இயக்கப்படுவதால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே பொன்னமராவதியிலிருந்து மேலத்தானியம், பாலகுறிச்சி வழித்தடத்தில் இயக் கப்படும் நகர பஸ்களை சூரப்பட்டி வரை நீட்டிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
Next Story

