சேலத்தில் கஞ்சா விற்ற வாலிபர் சிக்கினார்

சேலத்தில் கஞ்சா விற்ற வாலிபர் சிக்கினார்
X
போலீசார் நடவடிக்கை
சேலம் அம்மாப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் குமரன் தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் அம்மாப்பேட்டை மணல்தெரு பகுதியை சேர்ந்த பிரகதீஸ்வரன் (வயது 21) என்பதும், கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story