குறைகேட்புக் கூட்டம்

குறைகேட்புக் கூட்டம்
X
கூட்டம்
கள்ளக்குறிச்சி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் செய்திக்குறிப்பு: பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களுக்கான குறைகேட்புக் கூட்டம் இன்று (11ம் தேதி) கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடக்கிறது.கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து நிலை பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் தங்களது பணி தொடர்பான குறைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம். மேலும், பணியின் போதும், வேறு வகையிலும் ஏற்படும் குறைகள் தொடர்பாகவும் மனு அளிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story